உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை (26.06.2024) முன்னிட்டு பொதுமக்களிடையே போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் மதுவிலக்கு காவல் துறையினர் சார்பாக நாகப்பட்டினம் A.D.M. மகளிர் கல்லூரி மாணவிகள், துணை ஆட்சியர், மதுவிலக்கு ஆயத்தீர்வை (கலால்) துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைத்து சுமார் 500 நபர்கள் வெளிப்பாளையம் அவுரித்திடலில் 12.00 மணிக்கு தொடங்கி விழிப்புணர்வு பேரணியை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தும், விழிப்புணர்வு பிரச்சாரம், விழிப்புணர்வு பதாகைகளுடன் செல்லும் விழிப்புணர்வு பேரணியானது நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு
பெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தினை முழுமையாக கட்டுப்படுத்திட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவலை உங்கள் SPயிடம் பேசுங்கள் என்ற தொலைபேசி எண். 8428103090 வாட்ஸ் ஆப் எண். 9498181257 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண். 10581 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இரகசியம் பாதுகாக்கப்படும்.



