மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படி இன்று நடைபெற்ற திருப்பரங்குன்றம் கோவில் புதிய காவல் நிலையம் திறப்பு விழாவில் காவல்துறை ஆணையர் தெற்கு இனிக்கோ திவ்யன் அவர்கள் தலைமையேற்று திறந்து வைத்தார்கள் இந்த நிகழ்வில் திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர்கள் மற்றும் திருப்பரங்குன்றம் சரகம் காவல் உதவி ஆணையாளர் சசி பிரியா அவர்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர்கள் திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் மற்றும் ஆய்வாளர் ராஜதுரை அவர்கள் மற்றும் காவலர்களும் கலந்து கொண்டனர்

இந்த புதிய காவல் நிலையம் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள கவரா பலிஜா செட்டியார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மண்டபத்தில் இன்று முதல் செயல்பட உள்ளது
மாவட்ட செய்தியாளர் அருள் ஜோதி


