மதுரை மாநகர் காவல் துறையில் 2000 ஆண்டில் பணியில் சேர்ந்து JAP (juvenile aided police) பிரிவில் பணிபுரிந்த தலைமை காவலர் திரு ராஜு என்பவர் உடல் நலக்குறைவு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி மாதம் மரணம் அடைந்தார்.
மறைந்த தலைமை காவலருடன் கடந்த 2000 வருடம் பணியில் சேர்ந்த தமிழக காவல்துறையில் பணிபுரியும் அவருடைய நண்பர்கள் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு உதவும் நோக்கில்
வசூல் செய்த பணம் ரூ.1,55,000/-க்கான காசோலையுடன் தன்னுடைய பங்களிப்பையும் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளிடம் சக காவலர்கள் முன்னிலையில் நேரில் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் 2000 ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அருள் ஜோதி