போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது

போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது

மதுரையில் போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலிசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மதுரை செல்லூர் 60 அடி சாலையில் போதை ஊசி போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக செல்லூர் போலிசாருக்கு ஞாயிற்று கிழமை இரவு தகவல் கிடைத்தது . இதையடுத்து போலிசார் 60 அடி ரோட்டில் உள்ள பழைய கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த இருவர் போதை மாத்திரை விற்பது தெரிந்தது. உடனே இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். இதில் இவர்கள் செல்லூர் தாகூர் நகரை சேர்ந்த உதயகுமார் வயது 21, மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் முதல் தெருவை சேர்ந்த அப்துல்ரஹ்மான் வயது 23 என தெரிய வந்தது. இவர்கள் மருந்து கடைகளில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை வாங்கி அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. ஆகவே இவர்கள் இருவரையும் போலிசார் கைது செய்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.