சென்னையில் மழை, வெள்ள நிவாரணப் பணிகள்!

சென்னையில் மழை, வெள்ள நிவாரணப் பணிகள்!

கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி தேநீர், பிஸ்கட் கொடுத்து ஊக்கப்படுத்தினார்!

சென்­னை­யில் கொட்­டும் மழை­யில் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் மழை, வெள்ள நிவா­ர­ணப் பணி­களை ஆய்வு செய்­தார். மேலும் தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி அவர்­க­ளுக்கு தேநீர், பிஸ்­கட் கொடுத்து ஊக்­கப்­ப­டுத்­தி­னார்.

வங்­கக் கட­லில் நில­வும் ஆழ்ந்த காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி கார­ண­மாக, சென்னை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளில் தொடர் கன­மழை பெய்து வரு­கி­றது. குறிப்­பாக சென்னை மற்­றும் அதன் புற­ந­கர் பகு­தி­க­ளில், நேற்று முன்தினம் இரவு முதல், இடி -­மின்­னல் மற்­றும் பலத்­த­காற்­று­டன் மழை பெய்து வரு­கி­றது. தமிழ்­நாடு அர­சின் போர்க்­கால நட­வ­டிக்­கை­யால், தாழ்­வா­னப் பகு­தி­க­ளில் தண்­ணீர் உட­னுக்­கு­டன் அகற்­றப்­பட்டு வரு­கி­றது. இந்­நி­லை­யில், சென்னை யானை­க­வுனி பகு­தி­யில் கொட்­டும் மழைக்கு நடுவே, கால்­வாய் சீர­மைப்பு பணி­களை முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று (15.10.2024) நேரில் ஆய்வு செய்­தார். மேலும், மழை முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் குறித்து அமைச்­சர்­கள் மற்­றும் அதி­கா­ரி­க­ளி­டம் அப்­போது கேட்­ட­றிந்­தார்.

பேசின் மேம்­பா­லம் –

இதைத்­தொ­டர்ந்து, சென்னை பேசின் மேம்­பா­லம் பகு­தி­யில் மழை­நீர் அகற்­றும்பணி­ களை முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு செய்­தார். அப்­போது, தாழ்­வா­னப் பகு­தி­க­ளில் சில இடங்­க­ளில் தேங்­கி­நின்ற மழை­நீரை விரைந்து அகற்­று­மாறு அதி­கா­ரி­­களுக்கு முத­ல­மைச்­சர் உத்­த­ர­விட்­டார்.

புளி­யந்­தோப்பு

இதைத்­தொ­டர்ந்து, சென்னை புளி­யந்­தோப்பு பகு­தி­யில் மழை­நீர் அகற்­றும் பணி­களை நேரில் ஆய்வு செய்த முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், பணி­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டார்.

அப்­போது அங்கு மழை­நீர் அகற்­றும் பணி­யில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டி­ருந்த முன்­­களப் பணி­யா­ளர்­க­ளான, தூய்­மைப் பணி­ யா­ளர்­களை சந்­தித்து, அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டிய முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பணி­கள் குறித்து கேட்­ட­றிந்­தார்.

பின்­னர், தூய்­மைப் பணி­யா­ளர்­களை அரு­கில் இருந்த தேநீர் கடைக்கு அழைத்­துச் சென்று தேநீர் மற்­றும் பிஸ்­கெட் வாங்­கித்­தந்து ஊக்­கப்­ப­டுத்தி உற்­சா­க­ம­ளித்­த­து­டன், தாமும் அவர்­க­ளு­டன் இணைந்து தேநீர் அருந்­தி­னார். முத­ல­மைச்­ச­ரின் இந்த செயலை முன்­க­ளப் பணி­யா­ளர் அனை­வ­ரும் வியந்து வெகு­வா­கப் பாராட்­டி­னார்­கள். முத­ல­மைச்­சர் அளித்­துள்ள ஊக்­கம் மேலும் தங்­களை பணி­யில் மிகுந்த ஆர்­வ­மு­டன் தொடர்ந்து ஈடு­பட வழி­வ­குக்­கும் என நெகிழ்ச்­சி­யு­டன் தெரி­வித்­த­னர்.

ஓட்­டேரி

இதைத்­தொ­டர்ந்து, சென்னை ஓட்­டே­ரி­யில், தாழ்­வா­னப் பகு­தி­யில் மழை­ நீர் அகற்­றும் பணி­களை முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு செய்­தார். அப்­போது, அங்கு மழை­நீரை அகற்­றும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த தூய்­மைப் பணி­யா­ளர்­­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யாடி, பணி­கள் குறித்து கேட்­ட­றிந்த முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவர்­க­ளுக்கு தேநீர் மற்­றும் பிஸ்­கெட் விநி­யோ­கம் செய்து, முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளின் பணி­களை ஊக்­கப்­ப­டுத்தி உற்­சா­கப்­ப­டுத்­தி­னார்.

வட­கி­ழக்கு பரு­வ­மழை முன்­னெச்­ச­ரிக்கை பணி­க­ளுக்­கென பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி சார்­பில் 21,000 பணி­யா­ளர்­கள் சுழற்சி முறை­யில் 15 மண்­ட­லங்­க­ளி­லும் பணி செய்து வரும் நிலை­யில், அவர்­களை முத­ல­மைச்­சர் நேரில் சந்­தித்து ஊக்­கப்­ப­டுத்­தி­ய­தால் மகிழ்ச்சி தெரி­வித்­த­னர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.10.2024) சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், யானைக்கவுனி கால்வாயில் மழைநீர் தடையின்றி சென்றிட மழைநீரில் அடித்துவரப்படும் கழிவுகளை JCB இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.