மதவெறியை மாய்த்து, மனிதநேயம் காப்போம்

மதவெறியை மாய்த்து, மனிதநேயம் காப்போம்

‘‘தந்தை பெரி­யார், புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் உள்­ளிட்ட மானிட சமு­தா­யத் தலை­வர்­கள் தந்­தி­ருக்­கும் அறி­வொ­ளி­யில் மக்­க­ளோடு பய­ணிப்­போம்! என்றும், பொது­வு­டைமை, சமத்­து­வம், சமூக நீதி கொண்ட சமு­தா­யத்தை உரு­வாக்க, புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் பிறந்த நாளில் மத­வெ­றியை மாய்த்து மனி­த­நே­யம் காப்­போம்’’ என்றும் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் சென்னை கலை ­வா­ணர் அரங்­கில் நடை­பெற்ற அண்­ணல் அம்­பேத்­கர் அவர்­க­ளின் பிறந்த நாளான ‘சமத்­துவ நாள்’ விழா­வில் உரை­யாற்­றும் போது கூறி­னார்.

முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று (14.04.2025) ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத்­துறை சார்­பில் சென்னை, கலை­வா­ணர் அரங்­கில் நடை­பெற்ற அண்­ணல் அம்­பேத்­கர் அவர்­க­ளின் பிறந்­த­நா­ளான சமத்­துவ நாள் விழா­வில் ஆற்­றிய உரை வரு­மாறு:–

இந்த சிறப்­பான நிகழ்ச்­சிக்கு வருகை தந்­தி­ருக்­கக்­கூ­டிய பிர­காஷ் அம்­பேத்­கர் உள்­ளிட்ட உங்­கள் அனை­வ­ருக்­கும் என்­னு­டைய அன்­பான வணக்­கம்.

“அடி­நாள் தொட்டு அடி­மை­க­ளாய், தொழும்­பர்­க­ளாய், ஆதிக்க சாதி­க­ளின் சவா­ரிக் குதி­ரை­க­ளாய், தாழ்த்­தப்­பட்­டோர் அல்­ல­லுற்று தண­லிலே மெழு­காய் தவி­த­வித்­துக் கிடந்த நிலை மாற்­றிட தகத்­த­காய சூரி­ய­னாய் எழுந்­தான் ஒரு­வன், அந்த தகை­சார்ந்த அறி­ஞ­னுக்கு பெயர்­தான் அம்­பேத்­கர் அவர்­கள்!

மாண்­டி­டும் புழுக்­க­ளாம் மனி­தர்­களை காத்து, அவர் மீண்­டிட போர்க்­கொடி உயர்த்­திய மேலோன்!!புய­லாய் சீறி, பூகம்­ப­மாய் குலுங்கி, புரட்சி செய்த புதிய புத்­தன்­தான் அம்­பேத்­கர்!” என்று தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளால் போற்­றப்­பட்ட புரட்­சி­யா­ளர் அண்­ணல் அம்­பேத்­க­ரின் பிறந்­த­நா­ளில் அவரை வணங்கி நான் என்­னு­டைய உரையை தொடங்­கு­கி­றேன்!

வரலாற்றை மாற்றி எழுதிய அம்பேத்கரின் பிறந்தநாள்!

இன்று, வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நாள்! இந்­தச் சமூ­கத்­தில் நில­வும் சாதிய ஏற்­றத் தாழ்­வு­கள், தீண்­டாமை குற்­றங்­கள், உள்­ளிட்­ட­வற்­றுக்கு எதி­ராக முழங்கி, வர­லாற்றை மாற்றி எழு­திய புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் பிறந்­த­நாள்! அத­னால்­தான், நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில், தந்தை பெரி­யார் அவர்­க­ளு­டைய பிறந்­த­நாளை, சமூ­க­நீதி நாளா­க­வும், புரட்­சி ­யா­ளர் அம்­பேத்­கர் பிறந்த இந்த நாளை சமத்­துவ நாளா­க­வும் அறி­வித்­தோம்!

இன்று காலை அம்­பேத்­கர் மணி­மண்­ட­பத்­தில் சமத்­துவ நாள் உறு­தி­மொழி எடுத்­துக் கொண்­டு­தான் இந்த நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருக்­கி­றோம்! சமத்­து­வத்தை நோக்கி நம்­மு­டைய சமூ­கம் வேக­மாக நக­ர­வேண்­டும் – இந்த மண்­ணில் இருக்­கின்ற ஒவ்­வொ­ருத்­த­ரு­டைய உள்­ளத்­தி­லே­யும் மாற்­றத்­ திற்­கான சிந்­தனை வலுப்­பெற வேண்­டும் என்று தான், இந்த முன்­னெ­டுப்பை எடுத்­தி­ருக்­கி­றோம்!

புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கரை உயர்த்­திப் பிடித்து கொண்­டா­டும் இயக்­கம்­தான், திரா­விட இயக்­கம்! அவர் எழு­திய ‘சாதியை ஒழிக்க வழி’ நூலை 1930-ஆம் ஆண்டே தமி­ழில் வெளி­யிட்­ட­வர் தந்தை பெரி­யார் அவர்­கள்! அது­மட்­டு­மல்ல, புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் பெயரை, அவர் பிறந்த மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் இருக்­கின்ற மராத்­வாடா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்குவைக்­கம் போராட்­டம் நடத்­திய கால­கட்­டத்­தில், இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­த­லாக, தமிழ்­நாட்­டில் டாக்­டர் அம்­பேத்­கர் சட்­டக் கல்­லூரி என்று பெயர் சூட்­டி­ய­வர் நம்­மு­டைய முத்­த­மி ­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்!

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒலித்தவர்!

இந்த பாதை­யில்­தான், புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் நமக்­கான அடை­யா­ளம் என்று தொடர்ந்து முழங்­கிக் கொண்டு இருக்­கி­றோம்! சமூ­க­நீதி, சமத்­து­வம், தலித் மக்­க­ளின் உரி­மை­க­ளுக்­காக தொடர்ந்து போராடி வரும் புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் அவர்­க­ளின் பேரன் பிர­காஷ் அம்­பேத்­கர் அவர்­கள், மக்­க­ள­வை­யில் இரண்டு முறை­யும், மாநி­லங்­க­ள­வை­யில் ஒரு முறை­யும் பங்­கெ­டுத்து ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான குரலை நாடா­ளு­மன்­றத்­தில் ஒலித்­த­வர். அவர் இன்­றைக்கு நம்­மு­டைய இந்த நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று உரை­யாற்­றி­ய­தற்கு என்­னு­டைய இத­ய­மார்ந்த நன்­றியை நான் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

இந்த விழா­வுக்கு வரு­வ­தற்கு முன்­னால், சைதாப்­பேட்­டை­யில் தமிழ்­நாட்­டின் தனிப்­பெ­ரும் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ராக விளங்­கிய எம்.சி.ராஜா அவர்­கள் பெய­ரில் அமைந்­தி­ருக்­கும் மாண­வர் விடு­தியை திறந்து வைத்­து­விட்டு நான் இந்த நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருக்­கி­றேன்.

சென்னை மாகாண சட்­ட­மன்­றத்­துக்கு நிய­மிக்­கப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளில் முத­லா­வது உறுப்­பி­னர் எம்.சி.ராஜா அவர்­கள்.அவர்­தான் பட்­டி­ய­லின மக்­க­ளின் துய­ரங்­களை முதன்­மு­த­லாக பிரிட்­டிஷ் ஆட்­சி­யா­ளர்­க­ளின் கவ­னத்­திற்­குக் கொண்டு சென்­ற­வர்.

அயோத்­தி­தா­சப் பண்­டி­தர் அவர்­க­ளின் மறை­வுக்­குப் பிறகு, சென்னை ஆதி­தி­ரா­வி­டர் மகா­ஜன சபை­யைச் சீர­மைத்து நடத்­தி­ய­வர். நீதிக்­கட்­சியை உரு­வாக்­கிய தலை­வர்­க­ளில் முக்­கி­ய­மான ஒரு­வர்.

இலட்சியத்துடன் படித்து முன்னேற

எம்.சி. ராஜா பெயரில் விடுதி!

1927-ஆம் ஆண்டே ‘ஒடுக்­கப்­பட்ட இந்­துக்­கள்’ என்ற ஆங்­கில நூலை எழுதி வெளி­யிட்­ட­வர். 1937-ஆம் ஆண்டு சென்னை மாகா­ணத்­தின் இடைக்­கால அமைச்­ச­ர­வை­யில் அமைச்­ச­ராக இருந்­த­வர். அத்­த­கைய பெருந்­த­லை­வ­ரின் பெய­ரால் அமைந்­தி­ருக்­கின்ற அந்த விடுதி, இலட்­சி­யத்­து­டன் படித்து முன்­னேற பாடு­பட்­ட­வர்­­களுக்­கான இட­மாக இருந்­தி­ருக்­கி­றது!

ஒரு பானை சோற்­றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்­வார்­கள். இந்த மேடை­யில் நம்­மு­டைய சகோ­த­ரர் திரு­மா­ வ­ள­வன் அவர்­கள் மகிழ்ச்­சி­யு­டன் அமர்ந்­தி­ருக்­கி­றார். கார­ணம் அவ­ரும் அந்த விடு­தி­யில் தங்­கிப் படித்­த­வர் தான். அதை திறந்து வைத்­து­விட்டு அந்­தக் கட்­டி­டத்தை சுற்­றிப்­பார்த்­தோம். சுற்­றிப்­பார்த்த நேரத்­தில் தன்­னையே மறந்து அவர் சொன்­னார் – இங்கே தங்கி, மீண்­டும் ஒரு ஐந்து வரு­டங்­கள் படிக்­க­லாம் போல தோன்­று­கி­றது என்று சொன்­னார். இன்­றைக்கு எல்­லா­ருக்­கும் அர­சி­யல், சமூக அறி­வி­யல் பாடம் சொல்­லித் தரு­கின்ற சிந்­த­னை­யா­ள­ராக, கொள்கை பிடிப்­பு­மிக்க அர­சி­யல் தலை­வ­ராக அவர் உயர்ந்­தி­ருக்­கி­றார்!

விரைவில் விடுதி முகப்பில் எம்.சி.ராஜா மார்பளவு சிலை!

இத்­த­கைய பெரு­மைக்­கு­ரிய விடு­தியை திறந்து வைத்­தி­ருக்­கின்ற இந்த நாளில், அந்த விடு­தி­யில் முகப்­பு­றத்­தில் பெருந்­த­லை­வர் எம்.சி.ராஜா அவர்­க­ளின் மார்­ப­ளவு சிலை மிக விரை­வில் வைக்­கப்­ப­டும் என்­பதை மகிழ்ச்­சி­யோ­டும், பெரு­மை­யோ­டும் நான் இந்த நிகழ்ச்­சி­யில் அறி­விக்­கி­றேன்.

இன்­றைக்கு திரா­விட மாடல் ஆட்­சி­யில், எண்­ணி­ல­டங்கா சாத­னை­களை செய்து கொண்டு இருக்­கி­றோம்! அத­னால்­தான், சென்­னை­யில் இருக்­கின்ற பல்­வேறு உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளில் பயின்­று­வ­ரும் ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை ஒவ்­வொரு ஆண்­டும் உயர்ந்து கொண்டே வரு­கி­றது.

அந்த மாண­வர்­க­ளுக்கு இந்த எம்.சி.ராஜா விடுதி பேரு­த­வி­யாக நிச்­ச­ய­மாக இருக்­கும்! ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­­குடி­யி­ன­ரின் சட்­ட­பூர்­வ­மான உரி­மை­க­ளைப் பாது­காக்­க­வும், தந்­தைப் பெரி­யார், புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் வழி­யில், ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­ன­ரின் ஒருங்­கி­ணைந்தவளர்ச்­சிக்­கான

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.