ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வருவதாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சத்தியமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெகநாத் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சத்தியமங்கலம் பழைய மார்க்கெட் அருகே சத்தி சுண்ணாம்பு கார வீதியைச் சேர்ந்த நடராஜன் (வயது 52) என்பவர் ஆம்னி காரில், 69.800 கிலோ எடையுள்ள, ரூபாய் 49,660 மதிப்புள்ள பான் மசாலா புகையிலை பொருட்களை கடத்தி வருவது கண்டறியப்பட்டு, நடராஜ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஆம்னி காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி
