தேனியில் சுருளி சாரல் நிகழ்ச்சி

தேனியில் சுருளி சாரல் நிகழ்ச்சி

தேனி மாவட்டத்தில் உள்ள தென்றல் தவழும்
சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் சாரல் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா சாரல் விழாவை துவக்கி வைத்து,விழா பேருரை மற்றும் தலைமையுரையாற்றினார்.ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் முன்னிலை வகித்தார்.செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே,மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த்,ஏ.எஸ்.பி.மது குமாரி,பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பாலசுப்பிரமணி,திட்ட இயக்குனர்,சுற்றுலா அலுவலர், துறை சார்ந்த அலுவலர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.உலகில் பல்வேறு முக்கிய இடங்கள், கலாச்சார பெருமைகளை தெரிந்து கொள்ளவும்,அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் செப்டம்பர் 27-ம் தேதி அன்று உலக சுற்றுலா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில்,உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுருளி அருவி சாரல் துவக்க விழாவில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி,பரதநாட்டியம், தேவராட்டம்,கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.நேற்று துவங்கிய சாரல் விழா வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி வரை 6 நாட்கள் காலை 10 மணி முதல் 4 மணி வரை பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள்,கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள்,பானை உடைக்கும் போட்டி,மகளிர் திட்டம் சார்பில் கோலப் போட்டிகள்,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கொழு, கொழு குழந்தைகள் போட்டி,கலை பண்பாட்டுத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள்,கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய்கள் கண்காட்சி,சமூக நலத்துறை சார்பில் பெண்கள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்,சுற்றுலா பயணிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி,நெகிழி பொருட்களை தவிர்த்து மாற்றுப் பொருட்களை உபயோகிப்பது தொடர்பான பணிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, நீர்வளத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.மகளிர் சுய உதவி குழுக்கள் தயார் செய்யும் பொருட்கள் கண்காட்சி மற்றும் சிறுதானிய உணவு வகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனைகளும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் மலிவு விலையில் வழங்கபடவுள்ளது.சாரல் விழாவை முன்னிட்டு சுருளி அருவிக்கு தேனி,உத்தமபாளையம் மற்றும் கம்பம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு இருந்தன.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.