போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

🚨💥 12.12.2023 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்த ஒட்டன்சத்திரம் K.கீரனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (26) என்பவரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

🚨💥 இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்கள், நீதிமன்ற முதல்நிலைக் காவலர் திருமதி.கார்த்திகை வேணி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 12.12.2023-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சரவணன் என்பவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.