NEWS UPDATE 28-10-2023

NEWS UPDATE 28-10-2023

திருவொற்றியூர்: தெரு நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த குழந்தை உள்பட 5 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

🏵️சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் விவேகானந்தர் தெருவில் வசிப்பவர் தேவி. இவர் தனது 1 1/2 வயது குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு வீட்டுவாசலில் நின்றிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த ஒரு தெரு நாய், குழந்தை மீது பாய்ந்து முகத்தை சரமாரியாக கடித்து குதறியது. இதனால் அந்த நாயிடம் இருந்து குழந்தையை காப்பாற்றுவதற்கு ஓடிவந்த தாத்தாவையும் பொதுமக்கள் 3 பேரையும் நாய் கடித்து குதறியது.

🏵️இதில் குழந்தை உள்பட அனைவரும் ரத்தவெள்ளத்தில் துடித்தனர். உடனே அவர்களை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

🏵️ இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,’’ திருவொற்றியூர், மணலி, மாதவரம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக ஏராளமானோர் தெரு நாய் கடிக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.