பெரியகுளத்தில் அஇஅதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

பெரியகுளத்தில் அஇஅதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அரண்மனை தெரு பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 அது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது .இந்தப் பொதுக்கூட்டத்திற்கு எம்ஜிஆர் இளைஞர் அணி நகரத் துணைச் செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார் .தேனி நகர்கழக செயலாளர் கிருஷ்ணகுமார் ,வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாஷ் ,பெரியகுளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.வி.சேகர் முன்னிலை வகித்தனர். ராஜகுரு ,வைகை பாண்டி ,தேனி நகர அம்மா பேரவை செயலாளர் சுந்தரபாண்டியன் ,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் தவமணி ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர் .இந்த பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக கழக அமைப்புச் செயலாளர் எஸ் டி கே ஜக்கையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .இதில் நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர் மதுரை கிருபாகரன் , வடுகை பி.சுந்தரபாண்டியன் , முன்னாள் மாவட்டக் கழக துணைச் செயலாளர் முருக்கோடை ராமர் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவீரன் ,உள்ளிட்ட ஏராளமான மாவட்ட, ஒன்றிய,நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் முன்னாள் நகர எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராஜாங்கம் நன்றியுரை கூறினார்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.