கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே என்.சி.சி முகாமிற்கு சென்ற 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்த நிலையில், மேலும் 1 பேரை தேடி வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே என்.சி.சி முகாமிற்கு சென்ற 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்த நிலையில், மேலும் 1 பேரை தேடி வருகின்றனர்


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் கிங்ஸ்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரைதேசிய மாணவர் படை (என்.சி.சி.) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி முகாமில் பங்கேற்றனர்.
இந்நிலையில் என்.சி.சி. முகாமிற்கு சென்ற 13 வயதுடைய 8ம் வகுப்பு மாணவி கடந்த 8ம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அதிகாலை 3 மணி அளவில், என்.சி.சி. பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சிவராமன்(30) என்பவர் அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் முதல்வர் சதீஷ்குமாரிடம் தெரிவித்தனர். அவர் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், தனது தாயாரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்ஐ சூர்யகலா விசாரணை நடத்தி, போக்சோ பிரிவின் கீழ் என்.சி.சி. பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி. உமா, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை ஆகியோர் நேற்று நேரில் விசாரணை நடத்தினர்.இதைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வரான திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார்(35), பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியரான கந்திகுப்பம் இந்திரா நகரை சேர்ந்த ஜெனிபர்(35), பள்ளியின் தாளாளரான கந்திகுப்பத்தை சேர்ந்த சாம்சன் வெஸ்லி(52), பயிற்சியாளர்களான தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கொள்ளுப்பட்டியை சேர்ந்த சக்திவேல்(39),கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பேரிகை அருகே உள்ள அமுதகொண்டப்பள்ளியை சேர்ந்த சிந்து(21), கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்த பெண் சத்யா(21), பர்கூர் ஒரப்பம் அருகே உள்ள சின்னஒரப்பத்தை சேர்ந்த சுப்பிரமணி(54) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான சுப்பிரமணி முன்னாள் சி.ஆர்.பி.எப். வீரர். தற்போது காவேரிப்பட்டணம் பி.வி.எஸ். மில் ரோட்டில் வசித்து வருகிறார். மேலும் தலைமறைவான முக்கிய குற்றவாளியான காவேரிப்பட்டணம் திம்மாபுரம் காந்தி நகரை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகயான சிவா(எ)சிவராமன்(28), சுதாகர் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சிவராமன் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து, தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார். பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த என்.சி.சி. முகாமில், 8ம் வகுப்பு மாணவி பயிற்சியாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும், அதற்கு பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், சக பயிற்சியாளர்கள் உடந்தையாக இருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியை சீரழித்த காமகொடூரன் சிவராமனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள கிங்ஸ்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த என்.சி.சி.முகாமில் பங்கேற்க சென்ற 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயதுடைய மாணவி பயிற்சியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் முகாமிற்கு சென்ற 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியை உள்பட 7 பேரை கைது செய்தனர். மாணவியை பலாத்காரம் செய்து மற்றும் சக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காமக்கொடூரன் சிவராமனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சிவராமனை தீவிரமாக தேடி கைது செய்தனர். இதற்கிடையே கைதான சிவராமன் இதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் சில பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், தர்மபுரி மாவட்டத்தில் சில பள்ளிகளுக்கும் என்.சி.சி. பயிற்சியாளராக சென்றுள்ளார். அங்கும் முகாமின் போது பல மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவுகளை கொடுத்து வந்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.